நீங்கள் வாக்காளரா?
தரமில்லாத வேட்பாளர்களை நிராகரிக்கிற மிகப் பெரிய சட்டபூர்வமான ஆயுதமான 49 [O] இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
அன்புடையீர்!
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகும் வேட்பாளர்....
- ஊழல் செய்யாதவரா?
- லஞ்சம் வாங்காதவரா?
- சொத்து சேர்ப்பதே குறியாக இல்லாதவரா?
- ஜாதி-மத வித்தியாசம் பார்க்காதவரா?
- வெற்றி பெற்றால் எளிதில் மக்கள் அவரைச் சந்திக்க முடியுமா?
- தொகுதியிலேயே தங்கி மக்களுக்குப் பணியாற்றுவாரா?
- பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமுதாயப்பணி செய்யும் குணமுள்ளவரா?
- தொகுதி மக்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவரா?அவற்றை தீர்ப்பதற்கான தெளிவான திட்டங்களை வைத்திருக்கிறாரா?
- நாட்டின் சட்ட திட்டங்கள்,அரசு நிர்வாகம்,பொருளாதாரம் போன்ற விபரங்களை நன்கு புரிந்து கொள்ளும் திறமை உள்ளவரா?
- நாட்டின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவரா?
- சமூக அளவிலும்,பொருளாதாரத்திலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஏழை,எளிய மக்களின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவரா?
- ஆண்-பெண் சமத்துவத்தை ஆதரிப்பவரா?
- தனி மனித ஒழுக்கமும்,நல்ல குணங்களும் கொண்டவரா?
- மக்களுக்காக சுறுசுறுப்பாக பணியாற்றக்கூடியத் திறன் உள்ளவரா?
என்ற கேள்விகளை எழுப்புங்கள்!பெரும்பாலான கேள்விகளுக்கு உங்கள் பதில் "ஆம்" எனில்,தயக்கமின்றி இப்படிப்பட்ட வேட்பாளருக்கு வாக்களியுங்கள். உங்கள் தொகுதியில் இத்தகைய தரமான வேட்பாளர் யாரும் போட்டியிடவில்லை என்றால்,வாக்குச்சாவடிக்கு சென்று 49 [O] தேர்தல் விதியின் படி யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற உங்களது கருத்தைக் கட்டாயம் பதியு செய்யுங்கள்.இதன் மூலம்,
- உங்களது உரிமையைப் பயன்படுத்தித் தரமில்லாத வேட்பாளரை நிராகரிக்க முடியும்.
- உங்கள் ஓட்டை வேறொருவர் பயன்படுத்துவதைத்(கள்ள ஓட்டு) தடுக்க முடியும்.
- நல்லவர்கள் ஆர்வத்துடன் தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலையை ஏற்படுத்த முடியும்.
- உங்கள் தொகுதியின் தலையெழுத்தை நீங்களே தீர்மானிக்க முடியும்.
வாக்குச்சீட்டைப் போலவே 49 [O] தேர்தல் விதியும், மக்களுக்குச் சட்டம் அளித்துள்ள
"வலுவான ஆயுதம்" தான்!
"வலுவான ஆயுதம்" தான்!
இதனைச் சரியாகப் பயன்படுத்தினால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்!
நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உங்களது சேவகர்கள்!
எஜமானர்கள் அல்ல!
எஜமானர்கள் அல்ல!
No comments:
Post a Comment