FOR MORE DETAILS

FOR MORE DETAILS
CLICK & READ THE SCHEDULE

Friday, April 24, 2009


நீங்கள் வாக்காளரா?

தரமில்லாத வேட்பாளர்களை நிராகரிக்கிற மிகப் பெரிய சட்டபூர்வமான ஆயுதமான 49 [O] இருப்பது
உங்களுக்குத் தெரியுமா?


அன்புடையீர்!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகும் வேட்பாளர்....

  1. ஊழல் செய்யாதவரா?
  2. லஞ்சம் வாங்காதவரா?
  3. சொத்து சேர்ப்பதே குறியாக இல்லாதவரா?
  4. ஜாதி-மத வித்தியாசம் பார்க்காதவரா?
  5. வெற்றி பெற்றால் எளிதில் மக்கள் அவரைச் சந்திக்க முடியுமா?
  6. தொகுதியிலேயே தங்கி மக்களுக்குப் பணியாற்றுவாரா?
  7. பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமுதாயப்பணி செய்யும் குணமுள்ளவரா?
  8. தொகுதி மக்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவரா?அவற்றை தீர்ப்பதற்கான தெளிவான திட்டங்களை வைத்திருக்கிறாரா?
  9. நாட்டின் சட்ட திட்டங்கள்,அரசு நிர்வாகம்,பொருளாதாரம் போன்ற விபரங்களை நன்கு புரிந்து கொள்ளும் திறமை உள்ளவரா?
  10. நாட்டின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவரா?
  11. சமூக அளவிலும்,பொருளாதாரத்திலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஏழை,எளிய மக்களின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவரா?
  12. ஆண்-பெண் சமத்துவத்தை ஆதரிப்பவரா?
  13. தனி மனித ஒழுக்கமும்,நல்ல குணங்களும் கொண்டவரா?
  14. மக்களுக்காக சுறுசுறுப்பாக பணியாற்றக்கூடியத் திறன் உள்ளவரா?
என்ற கேள்விகளை எழுப்புங்கள்!பெரும்பாலான கேள்விகளுக்கு உங்கள் பதில் "ஆம்" எனில்,தயக்கமின்றி இப்படிப்பட்ட வேட்பாளருக்கு வாக்களியுங்கள். உங்கள் தொகுதியில் இத்தகைய தரமான வேட்பாளர் யாரும் போட்டியிடவில்லை என்றால்,வாக்குச்சாவடிக்கு சென்று 49 [O] தேர்தல் விதியின் படி யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற உங்களது கருத்தைக் கட்டாயம் பதியு செய்யுங்கள்.இதன் மூலம்,

  • உங்களது உரிமையைப் பயன்படுத்தித் தரமில்லாத வேட்பாளரை நிராகரிக்க முடியும்.
  • உங்கள் ஓட்டை வேறொருவர் பயன்படுத்துவதைத்(கள்ள ஓட்டு) தடுக்க முடியும்.
  • நல்லவர்கள் ஆர்வத்துடன் தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலையை ஏற்படுத்த முடியும்.
  • உங்கள் தொகுதியின் தலையெழுத்தை நீங்களே தீர்மானிக்க முடியும்.
வாக்குச்சீட்டைப் போலவே 49 [O] தேர்தல் விதியும், மக்களுக்குச் சட்டம் அளித்துள்ள
"வலுவான ஆயுதம்" தான்!



இதனைச் சரியாகப் பயன்படுத்தினால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்!



நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உங்களது சேவகர்கள்!
எஜமானர்கள் அல்ல!

No comments:

Post a Comment